யாழ் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்ற UTE நிறுவனம்

May 27, 2020by UTE Admin

யாழ் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்ற UTE நிறுவனம்

இலங்கையில் பொறியியல் போக்குவரத்து, தொழிற்சாலை, கட்டட நிர்மாணம் போன்ற பல்வேறு துறைகளுக்கு தமது அற்புதமான சேவையை தொடர்ந்து 73 ஆண்டு காலமாக வழங்கி வரும் ஒரு தனியார் நிறுவனமான UTE ஆனது கடந்த பல வருட காலமாக இலங்கையின் வடக்குப் பகுதியில் தமது நிறுவன கண்காட்சிகளை நடாத்தி வருவதோடு இவ்வருடமும் யாழ் மக்களுக்கு இவ்வாய்ப்பை வழங்க திட்டமிட்டு கடந்த மாதம் நடைபெற்ற 11ஆவது யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் ‘யாழின் மறுமலர்ச்சி UTE CAT உடன்” எனும் தொனிப்பொருளின் கீழ் கலந்துகொண்டது.


இதில் UTE நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சில உற்பத்திகள் விற்பனைக்கூடங்களில் வாடிக்கையாளர்களுக்கு கொள்வனவு செய்யக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததோடு இத்துறைச்சார்ந்த தொழில் ஒப்பந்ததாரர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும்  பல நன்மைகளை பெற்றுக்கொடுத்ததுடன் புதிய வாடிக்கையாளர்களையும் உடன் இணைத்துக் கொண்டுள்ளது. வடக்குப் பிரதேசத்தில் பெருமளவிலான கட்டட நிர்மாணப் பணிகள் மற்றும் பாரிய செயற்றிட்டங்கள் இடம்பெற்று வருவதால் இந்நிறுவனத்தினூடாக பாரிய சேவையை மக்களுக்கு வழங்கக்கூடிய சாத்தியம் இதன் மூலம் கிடைக்கப்பெற்றது. மேலும் யாழில் விற்பனையாகக் கூடிய பொருட்களையும் பட்டியலிட்டு அவர்களுக்கான சிறந்த சேவையை வழங்குவதற்கான வாய்ப்பையும் தமதாக்கிக் கொண்டுள்ளது.

 

முக்கியமாக யாழ் மக்களது நம்பிக்கையை வென்ற ஒரேயொரு விற்பனை நாமமாக UTE நிறுவன உற்பத்திகள் காணப்படுகின்றமையால் பெருமளவிலான மக்கள் தொகை திரண்டு வந்த இவ்வர்த்தகக் கண்காட்சியில் சுமார் 40 மில்லியன் விற்பனை வறுவாயை UTE நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது என்பது பேரளவிலான வெற்றியின் குறியாகும். மேலும் முதல் முறையாக இந்நிறுவனத்தினால் செயற்படுத்தப்பட்ட ஊக்குவிப்புச் செயற்பாடக ‘தர்பார்” திரைப்படத்திற்கான டிக்கட்டுகள்; வழங்கப்பட்டமை மக்களை மேலும் ஊக்கப்படுத்தியது. எதிர்காலத்தில் யாழில் கட்டட நிர்மாணிப்புக்கான வசதிகளையும் மக்கள் பாவனைக்கு தேவையான ஏனைய இத்துறைசார்ந்த அனைத்து பொருட்களையும் தம் மண்ணில் பெற்றுக் கொள்ளகூடிய வாய்ப்பை மக்களுக்கு வழங்க UTE நிறுவனம் எத்தணித்துள்ளது.


UTE Admin